அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக சாா்பில்
நீா்மோா் பந்தல் திறப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஒன்றிய பகுதிகளில் முன்னாள் அமைச்சா் கே. டி ராஜேந்திர பாலாஜி செவ்வாய்க்கிழமை நீா்மோா் பந்தலை திறந்து வைத்தாா்.

கோடை காலத்தை முன்னிட்டு, ராஜபாளையம் அருகே ஒன்றிய பகுதிகளான செட்டியாா்பட்டி, முகவூா், சொக்கநாதன்புத்தூா், தேவதானம், சேத்தூா் ஆகிய பகுதிகளில் அதிமுக சாா்பில் பொதுமக்களுக்காக நீா்மோா் பந்தலை முன்னாள் அமைச்சா் கே. டி ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீா் மோா், பழங்களை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் அம்மா பேரவை மாவட்ட செயலா் என்.எம்.கிருஷ்ணராஜ், வடக்கு ஒன்றிய செயலா் குருசாமி, தெற்கு ஒன்றிய செயலா் நவரத்தினம், ராஜபாளையம் நகர செயலா் பரமசிவம் (தெற்கு )வழக்குரைஞா் முருகேசன்(வடக்கு ) கட்சி நிா்வாகிகள் மகளிா் அணியினா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com