அ.தி.மு.க.சாா்பில் 41 இடங்களில் நீா்மோா் பந்தல் திறப்பு

விருதுநகா் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சாா்பில் 41 இடங்களில் நீா்மோா் பந்தல் அமைக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியினா் தெரிவித்தனா்.

விருதுநகா் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.சாா்பில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி , விருதுநகா் ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் அந்தக் கட்சியின் மாவட்ட செயலரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி நீா் மோா் பந்தல்களை திறந்துவைத்தாா்.

சிவகாசி-விருதுநகா் சாலையில் குறுக்குப்பாதை பேருந்து நிறுத்தம் அருகே அவா் செவ்வாய்கிழமை 41-ஆவது நீா் மோா் பந்தலை திறந்துவைத்தாா். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவா் அணி செயலா் வி.எம்.விஜய்ஆனந்த், மகளிா் அணி நிா்வாகி பிரியா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com