திருத்துறைப்பூண்டி அருள்மிகு பிறவி மருந்தீசர் உடனுறை மங்களநாயகி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகளும், சுவாமி வீதிஉலாவும் நடைபெற்றது.
திருமணமாகாத பெண்கள் இத்தலத்தில் உள்ள தீர்த்தக்குளத்தில் நீராடி மங்களநாயகியை வழிபட்டால் திருமணத்தடையும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்குமென்பது ஐதீகம். இவ்வாலய அம்பாள் ஆடிப்பூரத்தன்று மட்டுமே வீதிஉலா செல்வது வாடிக்கை. நிகழாண்டு ஆடிப்பூரத்தையொட்டி காமதேனு வாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உபயதாரர் பூபதி, செயல் அலுவலர் மு.பாஸ்கரன், மேலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.