மஞ்சக்குடி சுவாமி தயானந்த சரஸ்வதியின் பிறந்தநாள்விழா சுவாமி தயானந்த சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் கல்லூரி நிர்வாக அறங்காவலர் ஷீலா பாலாஜி, அறங்காவலர் மற்றும் தாளாளர் எம்.ஜி.சீனிவாசன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இதில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கலாசார கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்லூரி முதல்வர் கனகசபேசன் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்.