திருவாரூரில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக் கடன், மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 229 பேர் மனு அளித்தனர்.
பொதுமக்களிடம் விசாரித்து மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுவை கொடுத்து குறித்த காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஏ. மலர்கொடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.