மத்திய அரசின் சாதனைகள் குறித்து கண்காட்சி நடத்த வேண்டும் என பாஜக சார்பில் திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கட்சியின் மாநில வணிகர் அணி முன்னாள் செயலாளர் எஸ்.பி. ராஜேந்திரன் கூறியதாவது: பாஜக மத்தியில் ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகளில் ஏழை, எளியோருக்கு ஏராளமான திட்டங்களை தீட்டி, செயல்படுத்திவருகிறது.
இதில், திருவாரூர் மாவட்டத்தில் திட்டப்பணிகளுக்காக மத்தியஅரசு ஒதுக்கீடு செய்த நிதி எவ்வளவு? அதன்மூலம் நிறைவேற்றப்பட்ட பணிகள் என்னென்ன என்பது குறித்து திருவாரூர் மாவட்டம் முழுவதும் கண்காட்சிகள் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யவேண்டும் என்றார்.