கூத்தாநல்லூர் ஈ.எஸ்.ஏ.ஆர். மெட்ரிக் பள்ளியில், திருப்பூர் குமரன் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், தலைமையாசிரியர் ஏ. சுந்தர், விடுதைப் போராட்டத்தில் திருப்பூர் குமரன் பங்கு குறித்து பள்ளி குழந்தைகளிடம் விளக்கிக் கூறினார். பின்னர், பள்ளிக் குழந்தைகளிடம் திருப்பூர் குமரன் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டு, சரியாக பதிலளித்த குழந்தைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.