மன்னார்குடி வட்டம், கோட்டூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாததைக் கண்டித்து, தொடர் போராட்டம் நடத்தவுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அக்கட்சியின் மாவட்டச் செயலர் ஐ.வி. நாகராஜன் ஞாயிற்றுக்கிழமை வெளிட்ட அறிக்கை:
கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கோட்டூர், குன்னியூர், ரெங்கநாதபுரம், செருகளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 2016-17 ஆம் ஆண்டிற்கான பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. இதை உடனடியாக வழங்க வலியுறுத்தி அக்.25-ஆம் தேதி, கோட்டூரில் நடைபெறவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாட்டில், தொடர் போராட்ட இயக்கம் நடத்துவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது என தெரிவித்துள்ளார்.