மன்னார்குடி நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கட்சி நிதியாக ரூ. 1 லட்சம் அளிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, நிதி பொறுப்பாளர் கே. அகோரம் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜனிடம், மன்னார்குடி நகரக்குழு சார்பில் பொதுமக்கள், வர்த்தகர்களிடமிருந்து, நன்கொடையாகப் பெறப்பட்ட ரூ. 1 லட்சத்தை கட்சி நிதியாக நகரச் செயலர் எஸ். ஆறுமுகம் வழங்கினார். இதில், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே. கைலாசம், டி. சந்திரா, நகரக்குழு நிர்வாகிகள் எம். சிராஜூதீன், ப. தெட்சிணாமூர்த்தி, ரா. ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.