மன்னார்குடி அருகே அரசு அனுதியின்றி டிராக்டரில் மணல் எடுத்தவரை வியாழக்கிழமை போலீஸார் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
கோட்டூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான போலீஸார், திருவண்டுதுறை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே அரிச்சந்திரா ஆற்றில் மணல் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில் மணல் அனுமதியின்றி எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, டிராக்டரை பறிமுதல் செய்து ஓட்டுநர் சேகரை (54) கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.