திருவாரூர் அருகே பல்வேறு கட்சிகளிலிருந்து பலர் விலகி மதிமுகவில் அண்மையில் இணைந்தனர்.
திருவாரூர் மாவட்டம், கொல்லுமாங்குடி அருகே காடுவெட்டி கூத்தனூர் பகுதியில் 90 -க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில், திருவாரூர் மாவட்டச் செயலாளர் பாலச்சந்திரன், நன்னிலம் ஒன்றியச் செயலாளர் சிவா, ஒன்றிய அவைத் தலைவர் துரைராஜ், திருவாரூர் நகர முன்னாள் செயலாளர் சாஞ்சி.எஸ். ஜெயராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.