திருவாரூரில் தமிழ்நாடு பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
சங்க மாநில மகளிரணி செயலாளர் ஹேமா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
பணி நிரந்தரம், முழு நேரப்பணி, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும், இல்லையெனில், தமிழகம் முழுவதும் உள்ள சிறப்பாசிரியர்களை ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.