நீடாமங்கலத்திலிருந்து திருச்சிக்கு 915 டன் நெல் அரவைக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
நீடாமங்கலம், மன்னார்குடி பகுதிகளில் இயங்கும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மற்றும் திறந்தவெளி சேமிப்பு மையங்கள், சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலை ஆகியவற்றில் இருப்பு வைக்கப்பட்ட நெல் 915 டன் சன்னரக நெல் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு, சரக்கு ரயில் மூலம் திருச்சிக்கு அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.