26- இல் முன்னாள் படைவீரர்கள் குறைதீர் கூட்டம்

திருவாரூரில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் செப்.26-ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருவாரூரில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் செப்.26-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் செப்.26- ஆம் தேதி மாலை 4 மணிக்கு முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் அளிக்கலாம். மனுக்களுடன் முன்னாள் படைவீரர் அடையாள அட்டையின் நகலை இணைக்க வேண்டும்.
இந்த கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்று, பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com