திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயிலில், தேசிகன் சுவாமிக்கு முத்தங்கி சேவை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
108 திவ்ய தேசங்களில் 27-ஆவது தலமான திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் தேசிகன் உத்ஸவம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டுக்கான தேசிகன் உத்ஸவ விழா தற்போது நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான நூதன முத்தங்கி சேவை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, தேசிகன் சுவாமி முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் திரளானப் பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.