திருவாரூர் அருகே பூட்டி சீல் வைக்கப்பட்ட கோயிலை வழிபாட்டுக்காக திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அகில பாரத இந்து மகா சபாவின் மாநில துணைத் தலைவர் வி.வேலன், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு:
திருவாரூர் அருகே வண்டாம்பாளை மகாசக்தி மாரியம்மன் கோயிலில், இருதரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னையால் கடந்த 13-ஆம் தேதி, திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால், ஆண்டுதோறும் பாரம்பரியமாக நடைபெறும் சித்திரைத் திருவிழா நிகழாண்டு நடைபெறவில்லை.
எனவே, மக்களின் வழிபாட்டுக்காக உடனடியாக கோயிலை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.