தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்ற பெற்ற மாணவர்களுக்கு புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
முத்துப்பேட்டை ஒன்றியம், கற்பகநாதர்குளம்- காடுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், இக்கல்வியாண்டில் நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அ. பவித்ரா, பா. அம்சா, ந. ஹரிகரன் ஆகிய மூவருக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. தலைமையாசிரியர் இரா. முருகேசன் தலைமை வகித்தார். பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் வே. கந்தசாமி, பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் மா. பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் நா. சொக்கலிங்கம், பா. முருகபாஸ்கரன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆர்.வி. முத்தண்ணா ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர். மாணவர்களின் தேர்ச்சிக்கு வித்திட்ட ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வி. பொற்செல்வி வரவேற்றார். ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். சு. அருளானந்தம் நன்றிகூறினார்.