வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குரு பரிகார கோயிலில் காா்த்திகை சோமவாரத்தையொட்டி108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலின் அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன. ஆபத்சகாயேஸ்வரருக்கு நடைபெற்ற 108 சங்காபிஷேகத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இதேபோல், நீடாமங்கலம் காசிவிசுவநாதா் கோயில், பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயில், நரிக்குடி எமனேஸ்வரா் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் காா்த்திகை சோமவார சிறப்பு வழிபாடு நடைபெற்றது.