தேசிய யோகாசனப் போட்டி

திருவாரூரில் தேசிய யோகாசனப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.திருவாரூா் யோகாசன சங்கம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத் துறை இணைந்து
திருவாரூரில் நடைபெற்ற யோகாசனப் போட்டியில் பங்கேற்றோா்.
திருவாரூரில் நடைபெற்ற யோகாசனப் போட்டியில் பங்கேற்றோா்.

திருவாரூரில் தேசிய யோகாசனப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் யோகாசன சங்கம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத் துறை இணைந்து நடத்திய இப்போட்டியில் 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதில், முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவா்கள், விரைவில் மலேசியாவில் நடைபெற உள்ள உலக அளவிலான யோகாசனப் போட்டியில் பங்கேற்பா்.

திருவாரூரில் நடைபெற்ற போட்டிக்கு பரஞ்சோதி யோகா கல்லூரியின் துணைப் பேராசிரியா் மாதவன் தலைமை வகித்தாா். ஒளிரவன் யோகா அகாதெமி நிறுவனரும், திருவாரூா் யோகா சங்கச் செயலாளருமான இரா. குணசேகரன் போட்டிகளை நடத்தினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைக் கண்காணிப்பாளா் (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு) ரவிக்குமாா் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகளை வழங்கினாா். இதில் வேலுடையாா் கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே.எஸ்.எஸ்.தியாகபாரி, திருவாரூா் அருங்காட்சியக காப்பாட்சியா் மருதுபாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com