கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடியில் உள்ள ஷீரடி சாய்பாபா தியான பீடத்தில் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சாய்பாபாவுக்கு மஞ்சள்பொடி, தயிர், பால், பன்னீர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், பக்தர்கள் கூட்டுப் பிரார்த்தனைநடத்தினர். தொடர்ந்து, சாய்பாபாவுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி வெள்ளையன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இதேபோல், சித்தாம்பூரில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.