நீடாமங்கலம் வட்டாரத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னைக்கு நிவாரணம் வழங்கி வரும் தமிழக அரசுக்கு விவசாயிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கஜா புயலில் நீடாமங்கலம் வட்டம் தளிக்கோட்டை, கருவாக்குறிச்சி, பேரையூர், அத்திக்கோட்டை, காரக்கோட்டை, செருமங்கலம், எடகீழையூர், வடுவூர் தென்பாதி கிராமங்களிலும் தென்னை மரங்கள்வேரோடு சாய்ந்தும், குறுத்து ஓடிந்தும் முழு பாதிப்பு ஏற்பட்டது. பாதிப்புகள் குறித்து வேளாண் துறையினர் கணக்கெடுப்பு நடத்தினர். இந்த கணக்கெடுப்பு அறிக்கை கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் மறுஆய்வு செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நிவாரணத் தொகை செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, விவசாயிகள் பலரும் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் பாராட்டு தெரிவித்தனர்.