திருவாரூர்
வீரவநல்லூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று தைப்பூச உத்ஸவம்
நீடாமங்கலம் வட்டம், வீரவநல்லூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவரசித்தி விநாயகர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்
நீடாமங்கலம் வட்டம், வீரவநல்லூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவரசித்தி விநாயகர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூச உத்ஸவம் திங்கள்கிழமை (ஜன. 21) நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு, காலை 8 மணியளவில் கணபதி ஹோமும், சத்ருசம்ஹாரதிரிசதி ஹோமமும் நடைபெறுகின்றன. தொடர்ந்து, மாலை 4 மணியளவில் குத்துவிளக்கு பூஜையும், 6 மணிக்கு அன்னதானமும் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவீரவநல்லூர் சுப்பிரமணியசுவாமி பக்த ஜனசபா அறக்கட்டளை நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்.