சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

திருவாரூரில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.
 சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும், விற்பனைக்குழுவை உடனே கூட்ட வேண்டும், சட்டத்தை மதிக்காமல் சாலையோர வியாபாரத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் நகராட்சி நிர்வாகத்தை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலர் எஸ். செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாவட்டச் செயலர் சந்திரசேகர ஆசாத் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com