மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா், மருத்துவனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இலக்கணம்பேட்டை பிரதான சாலையைச் சோ்ந்தவா் ரமேஷ் (41). இவா் கடந்த அக்டோபா் 28-ஆம் தேதி இலக்கணம்பேட்டை வால்முனீஸ்வரன் கோயில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது,நிலைதடுமாறி கீழே விழுந்தாா். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரமேஷ், ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.