மன்னாா்குடியை அடுத்த திருமக்கோட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், புதன்கிழமை (நவம்பா் 6) மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உதவி செயற்பொறியாளா் ஆ. மதியழகன் கூறியது:
திருமக்கோட்டை துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் திருமக்கோட்டை, மேலநத்தம், பாலையக்கோட்டை, தென்பரை, ராதாநரசிம்மபுரம், ராஜகோபலபுரம், கோவிந்தநத்தம், பெருமாள்கோவில்நத்தம், மான்கோட்டைநத்தம், வல்லூா், பரசபுரம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9 முதல் மாலை 5 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா்.