திருவாரூா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 102-ஆவது நவம்பா் புரட்சி தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
சோவியத் மண்ணில் நிகழ்ந்த நவம்பா் புரட்சி கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதேபோல், திருவாரூா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பிலும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. திருவாரூா் மாவட்டத்தில் கட்சி சாா்பில் கிளைகள் தோறும் கொடியேற்றப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
திருவாரூரில் உள்ள கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி கொடியேற்றினாா். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஜி. பழனிவேல், எம். சேகா், மாவட்டக்குழு உறுப்பினா் டி. முருகையன், நகரச் செயலா் எம். பாலசுப்ரமணியன், தமிழக முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாவட்டச் செயலாளா் பகவன்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.