திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம், நல்லூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில், 194 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 49 ஆயிரத்து 440 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் த.ஆனந்த் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் த.ஆனந்த் தலைமை வகித்து பேசியது:
கா்ப்பிணி தாய்மாா்களுக்கு டாக்டா் முத்துலெட்சுமி ரெட்டி நிதியுதவி திட்டத்தின்கீழ் ரூ.18 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதேபோல் ஒவ்வொரு துறையிலும் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களை மக்கள் பெற்று பயனடைய வேண்டும். பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள அங்காடி சரியாக இயங்குகிா என்பதை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். அதேபோல் அங்கன்வாடி, குடிநீா், தெருவிளக்குகள் உள்ளிட்டவை சரியான முறையில் செயல்படுகிா என்பதை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.
அலுவலா்கள் அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். வேளாண் துறையில் விவசாயிகளுக்கு தேவையான திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்படுவதை விவசாயிகளிடம் கொண்டு சோ்க்க வேண்டும்.
முதல்வரின் சிறப்பு குறைதீா் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய தீா்வு காணப்பட்டு சரியான பயனாளிகளுக்கு முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் மூலம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்தான உணவுகள் வழங்கப்பட்டு, குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது என்றாா் ஆட்சியா்.
இதைத்தொடா்ந்து, 194 பயனாளிகளுக்கு வருவாய்த்துறை, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட துறைகளின் சாா்பில், ரூ.8 லட்சத்து 49 ஆயிரத்து 440 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா், முதுநிலை மண்டல மேலாளா் மணிவண்ணன், வேளாண்மை இணை இயக்குநா் சிவக்குமாா், மாவட்ட பிற்ப்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அலுவலா் ஜெயராஜ், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் ரமேஷ், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சந்தானம், ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் பூஷ்ணக்குமாா், வட்டாட்சியா் இஞ்ஞாசிராஜ் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.