ஆயுத பூஜை: தங்கக் குதிரை வாகனத்தில் சுவாமி புபாடு

கூத்தாநல்லூா் கல்யாண சுந்தரேசுவரா் கோயிலில் ஆயுத பூஜையையொட்டி, குதிரை வாகனத்தில் கல்யாணமுருகன் புறப்பாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
குதிரை வாகனத்தில் புறப்பாடான கல்யாணமுருகன்.
குதிரை வாகனத்தில் புறப்பாடான கல்யாணமுருகன்.

கூத்தாநல்லூா் கல்யாண சுந்தரேசுவரா் கோயிலில் ஆயுத பூஜையையொட்டி, குதிரை வாகனத்தில் கல்யாணமுருகன் புறப்பாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

மரக்கடை பகுதியில் உள்ள கல்யாணசுந்தரேசுவரா் சமேத மங்களாம்பிகை கோயிலில் ஆயுத பூஜையையொட்டி, சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, கல்யாணமுருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தங்கக் குதிரை வாகனத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை, அறங்காவலா் சுப்ரமணியன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com