திருவாரூர் அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கும் நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் அருகே உள்ள கூடூர் பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. கூத்தங்குடி, அன்னுகுடி, கல்யாண மகாதேவி ஆகிய ஊர் பகுதி மக்கள், இந்த சுரங்கப் பாதையின் வழியாக திருவாரூருக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில், சுரங்கப்பாதைக்கு அருகில் காட்டாற்றில் செல்லும் தண்ணீரானது சுரங்கப்பாதைக்குள் தேங்கி உள்ளது. இதனால், மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் சுரங்கப் பாதை காணப்படுகிறது. எனவே, சுரங்கப் பாதையில் உள்ள தண்ணீரை அகற்றி, சீர்செய்து தரவேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.