கூத்தாநல்லூரில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனர்களின் சிறப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, இயக்குநர் ஜி.கலைச்செல்வி தலைமை வகித்தார். இயற்கை விவசாய கூட்டமைப்புச் செயலாளர் தெ.ஜெயகணபதி முன்னிலை வகித்தார். உழவர் உற்பத்தியாளர் திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து, திருவாரூர் நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் பேட்ரிக் ஜாஸ்பர் விளக்கினார். செயல் அலுவலர் பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மனோலயம் மனவளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளி நிறுவனர் பி.முருகையன் வரவேற்றார். ஊக்குவிப்பாளர் வினோத் நன்றி கூறினார்.