திருவாரூர்
சமுதாய வளைகாப்பு விழா
செம்பனார்கோவிலில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
செம்பனார்கோவிலில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் கலந்து கொண்டு 200 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருள்களை வழங்கினார். ஒன்றிய ஆணையர் தியாகராஜன் தலைமை வகித்தார். செம்பனார்கோயில் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சுந்ததராஜன், அரசு ஆரம்ப சுகாதார அலுவலர்கள் டாக்டர் அருண்பிரசாத், தீலிபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் சகுந்தலா வரவேற்றார். இதில் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் கபாடி பாண்டியன், முரளி
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.