சீர்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில், புறவழிச்சாலையோரம் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, முரளி தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் எஸ்.கே. வைத்தியநாதன் முன்னிலை வகித்தார். சங்கத் தலைவர் விசி.பாலாஜி மரக்கன்றுகளை நட்டு வைத்து விழாவைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, சமுஇ மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், திட்ட அலுவலர் முரளிதரன் முன்னிலையில் அப்பகுதி முழுவதும் மரக்கன்றுகளை நட்டுவைத்தனர். இதில் முன்னாள் தலைவர்கள் துரை, சுப்பு.சொர்ணபால், சங்கத்தைச் சேர்ந்த விஜயன், வெங்கட்ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வேதாரண்யம், செப். 28: வேதாண்யம் ரோட்டரி சங்கத்தின் சார்பில், மணியன்தீவு கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
வேதாரண்யம் நகராட்சி, ரோட்டரி சங்கம், சிகசு அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பங்கேற்று மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர். கோடியக்காடு சுந்தரம் பள்ளியின் தலைமையாசிரியர் நீலமேகம், ரோட்டரி சங்கத் தலைவர் என்.எஸ். கருணாநிதி, செயலாளர் செந்தில், முன்னாள் தலைவர்கள் கருணாநிதி, ரமேஷ்குமார், சிவக்குமார், வைரமூர்த்தி, கலையரசு, பொருளாளர் பழனித்துரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.