மன்னார்குடி அருகே சாலையோர பனை மரத்தில் திங்கள்கிழமை சிற்றுந்து மோதிய விபத்தில் ஓட்டுநர் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.
மன்னார்குடியை அடுத்துள்ள லெட்சுமாங்குடியிலிருந்து வடபாதிமங்கலத்துக்கு தனியார் சிற்றுந்து திங்கள்கிழமை மாலை புறப்பட்டுச் சென்றது. கோட்டூர் அருகே பெரியக்குறுவாடி ஜீவா தெரு பகுதியில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், சிற்றுந்து ஓட்டுநரான அரிச்சப்புரம் க. சரண்ராஜ் (28), பயணிகளான பெரியக்குறுவாடியைச் சேர்ந்த ஆர். ஷகிலா (48), மாரியம்மாள் (70), சுபஸ்ரீ(22), கீர்த்திகா (17) ஆகிய 5 பேர் காயமடைந்தனர். அவர்கள், சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதுகுறித்து, விக்கிரபாண்டியம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.