விஷம் குடித்த மூதாட்டி சாவு

மன்னார்குடி அருகே குடும்ப பிரச்னை காரணமாக விஷம் குடித்த மூதாட்டி சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். 

மன்னார்குடி அருகே குடும்ப பிரச்னை காரணமாக விஷம் குடித்த மூதாட்டி சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். 
மன்னார்குடி அருகேயுள்ள திருமக்கோட்டையைச் சேர்ந்தவர் சுந்தரம்பாள் (65). இவரது கணவர் கல்யாணசுந்தரம் ஏற்கெனவே இறந்துவிட்டார். இவர்களுடைய மூன்று மகன்களுக்கும் திருமணமாகி அதே பகுதியில் தனித்தனியே வசித்து வருகின்றனர். மகன்களுடன் சுந்தரம்பாளுக்கு பிரச்னை இருந்து வந்ததால் மனவேதனையில் இருந்தவர் ஏப்ரல் 20-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுந்தரம்பாள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து, திருமக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com