கிருஷ்ண ஜயந்தியையொட்டி, மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை பள்ளி மாணவர்கள் நடனமாடி வழிபட்டனர்.
மன்னார்குடி நியூட்டன் கிட்ஸ் பள்ளியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலுக்கு கிருஷ்ணர் - ராதை போல் வேடமிட்டு வந்தனர். பின்னர், கிருஷ்ண லீலைகளை கூறும் பாடல்கள் பாடியும், நடனமாடியும் வழிபட்டனர்.
இதில், பள்ளி இயக்குநர் சுகாசினி, முதல்வர் நிர்மலா, ஜேசிஐ மன்னை முன்னாள் தலைவர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.