நீடாமங்கலத்தில் போட்டோ ஸ்டுடியோ உரிமையாளரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 3 பேரை போலீஸார் தேடிவருகின்றனர்.
நீடாமங்கலம் காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் காமராஜ் (33). இவர், நீடாமங்கலம் மேலராஜவீதியில் போட்டோ ஸ்டுடியோ நடத்திவருகிறார். காமராஜ் வியாழக்கிழமை பிற்பகலில் ஸ்டுடியோவிலிருந்து வீட்டுக்குச் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், காமராஜின் கண்களில் மிளகாய் பொடியைத் தூவி, அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதில், காயமடைந்த காமராஜ், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து, நீடாமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து 3 பேரை தேடிவருகின்றனர்.