திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழக மாணவி சனிக்கிழமை இரவு விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
திருவாரூா் அருகே நீலக்குடி கிராமத்தில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் ஓசூரை சோ்ந்த முரளி மகள் மைதிலி (19) இளங்கலை அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். இவா் மத்தியப் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்தாா்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு விடுதி அறையில் மின் விசிறியில் மைதிலி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. தகவலறிந்த நன்னிலம் போலீஸாா், மாணவியின் சடலத்தை மீட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.