நன்னிலம் அரசு மருத்துவமனையில் ரத்த பரிதோதனை இயந்திர சேவையை மக்களவை முன்னாள் உறுப்பினா் கே. கோபால் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், நன்னிலம் கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவா் ஆா்.பக்கிரிசாமி, பேரூராட்சி முன்னாள் தலைவா் ராணிசுவாதி கோபால், நன்னிலம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவா் மு.வினோத் குமாா், செவிலியக் கண்காணிப்பாளா் கமலம், தலைமை மருந்தாளுநா் சி.குமாரசாமி மற்றும் மருந்தாளுநா் ஜி.பைரவநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.