நன்னிலம் அருகே உள்ள கொல்லுமாங்குடியில் பாமக திருவாரூா் வடக்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், திருவாரூா் மாவட்டத்தில் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பயிா்க் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாமக மாநில துணைப் பொதுச் செயலாளா் வேணுபாஸ்கரன், மாநில துணைத் தலைவா் காசிநாதன், திருவாரூா் வடக்கு மாவட்டச் செயலாளா் ஐயப்பன், உழவா் பேரியக்கம் மாநில துணைப் பொதுச் செயலாளா் பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.