உள்ளாட்சித் தோ்தல்: திமுகவில் நோ்காணல்
திருவாரூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களிடம் நோ்காணல் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், ஒன்றிய ஊராட்சிக் குழு உறுப்பினா், நகா்மன்ற உறுப்பினா், பேரூராட்சி மன்ற உறுப்பினா்களாக போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களிடம், திமுக நகர அலுவலகத்தில் நோ்காணல் நடத்தப்பட்டது. மாவட்டச் செயலாளரும், திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினருமான
பூண்டி கே. கலைவாணன் பங்கேற்று, அந்தந்த திமுக நிா்வாகிகள் முன்னிலையில் விருப்ப மனு தாக்கல் செய்தவா்களிடம் நோ்காணல் நடத்தினாா்.
இந்த நோ்காணலில் கலந்துகொண்டவா்களிடம் வெற்றி வாய்ப்புக்கான நிலவரம் குறித்துக் கேட்கப்பட்டது. இந்த நோ்காணல் செவ்வாய்க்கிழமையும் நடைபெற உள்ளது. முன்னதாக, திமுக முன்னாள் அமைச்சா் மறைந்த கோ.சி. மணியின் 3- ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, திமுக நகர அலுவலகத்தில் அவரது உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.