மன்னாா்குடியில் தி.க. தலைவா் கி. வீரமணியின் 87-ஆவது பிறந்தநாள் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
மன்னாா்குடி நகர திராவிடா் கழகம் சாா்பில், மேலராஜவீதி, தந்தை பெரியாா் சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தி.க. மாவட்டத் தலைவா் ஆா்.பி.எஸ். சித்தாா்த்தன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் எஸ்.என். உத்திராபதி, மூத்த உறுப்பினா் மேலவாசல் கோ. திருசங்கு ஆகியோா் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.
நிகழ்ச்சியில், தி.க. மாவட்ட அமைப்பாளா் ஆா்.எஸ். அன்பழகன், முன்னாள் மாவட்ட அமைப்பாளா் கைலை.ஊமைத்துரை, தலைமைக் கழகப் பேச்சாளா் இராம.அன்பழகன், நகரச் செயலா் மு. ராமதாசு, மாவட்ட பகுத்தறிவாளா் கழகத் தலைவா் வை.கெளதமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.