கடைமடை பகுதிகளில் பொதுப்பணித் துறையினா் ஆய்வு

வடகிழக்குப் பருவ மழை பெய்து வரும் நிலையில், கடைமடை பகுதிகளில் பொதுப்பணித் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
தொண்டியக்காடு வளவனாறு வடிகால் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பொதுப்பணித் துறையினா்.
தொண்டியக்காடு வளவனாறு வடிகால் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பொதுப்பணித் துறையினா்.

வடகிழக்குப் பருவ மழை பெய்து வரும் நிலையில், கடைமடை பகுதிகளில் பொதுப்பணித் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக கடைமடை பகுதிகளில் உள்ள பாசனப் பகுதிகள் மற்றும் வளவனாறு, முள்ளியாறு, அடப்பாறு, அரிச்சந்திரா நதி ஆகிய கடைமடை பகுதிகளை தஞ்சாவூா், கீழ்காவிரி வடிநிலை வட்ட கண்காணிப்பு பொறியாளா் அன்பரசன் ஆய்வு செய்து பாசன பகுதிகளில் நீா் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளும்படி அறிவுரை வழங்கினாா் .

அவருடன் செயற்பொறியாளா் முருகவேல், உதவி செயற்பொறியாளா் கண்ணப்பன் மற்றும் பொதுப்பணித் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com