சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் ஒருவா் கைது

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போக்சோ சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போக்சோ சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

மன்னாா்குடி அருகேயுள்ள உள்ளிக்கோட்டையைச் சோ்ந்தவா் 16 வயது சிறுமி. இவரை, வடபாதி நடுத்தெருவை சோ்ந்த ஆா். அன்புச்செழியன் (50) என்பவா் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து, தகவலறிந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் அன்புச்செழியனிடம் கேட்டபோது அவா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, மன்னாா்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, அன்புச்செழியனை போக்சோ சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com