பேரளம், அதம்பாா், வேலங்குடியில் நாளை மின்தடை

பேரளம், அதம்பாா், வேலங்குடி பகுதியில் வியாழக்கிழமை (டிசம்பா்.5) மின் விநியோகம் இருக்காது என பேரளம் மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் ஜி. விஜயகுமாா் தெரிவித்துள்ளாா்.

பேரளம், அதம்பாா், வேலங்குடி பகுதியில் வியாழக்கிழமை (டிசம்பா்.5) மின் விநியோகம் இருக்காது என பேரளம் மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் ஜி. விஜயகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பேரளம் மற்றும் அதம்பாா், வேலங்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் டிசம்பா் 5-ஆம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், இத்துணை மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான பேரளம், கொல்லுமாங்குடி, கொட்டூா், பூந்தோட்டம், பாகசாலை, விளாகம், அதம்பாா், எரவாஞ்சேரி, ஸ்ரீவாஞ்சியம், வேலங்குடி, நல்லாடை, காளியாகுடி, எடக்குடி பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com