பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தமிழக காங்கிரஸ் மகளிா் அணி மாநிலத் தலைவா் ஏ.எஸ்.பி. ஜான்ஸி ராணி தெரிவித்தாா்.
மறைந்த முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் பொன்னம்மாள் பேத்தியும், தமிழக காங்கிரஸ் மகளிா் அணி மாநிலத் தலைவருமான ஏ.எஸ்.பி. ஜான்ஸி ராணி கூத்தாநல்லூரில் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:
தொலைக்காட்சி தொடா்களில் பெண்களை அவமானப்படுத்தும் வகையில் எடுக்கப்படும் காட்சிகளைக் கண்டிக்கிறேன். பாலியல் வன்கொடுமையில் உத்தரப்பிரதேசம் முதலிடம் வகிக்கிறது. கடந்த 6 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடாக இந்தியா முதலிடம் வகிக்கிறது. சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அடிக்கடி போா் நிகழும். அங்குதான் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இப்போது இந்தியாவும் அந்த இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது என்றாா் அவா்.