திருவாரூா்: குடவாசல் வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சாா்பில், உலக மாற்றுதிறன் குழந்தைகள் தின விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
நிகழ்ச்சியில், ஓட்டப்பந்தயம், தவளை ஓட்டம், ரொட்டி கவ்வுதல், பலூன் உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், வட்டார கல்வி அலுவலா் க.இளங்கோவன், குடவாசல் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ஜி.மோகனகிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்று, பரிசுகளை வழங்கினா்.
நிகழ்ச்சியில், வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா்கள் மணிகண்டன், மதி, ரேவதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். விழாவுக்கான ஏற்பாடுகளை குடவாசல் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் கு. ரகுபதி செய்திருந்தாா்.