வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டியில் செவ்வாய்க்கிழமை வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

திருத்துறைப்பூண்டியில் செவ்வாய்க்கிழமை வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சங்கம் சார்பில் வழக்குரைஞர்களுக்கு மருத்துவக் காப்பீடு செய்து கொடுக்க வேண்டும், 65 வயதில் உயிரிழக்கும் வழக்குரைஞர்களுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், புதிய வழக்குரைஞர்களுக்கு உதவித் தொகையாக ரூய 10,000, ஒய்வூதியம், வீடு கட்ட சலுகை விலையில் மனை வழங்க வேண்டும் என  மத்திய அரசை வலியுறுத்தி ஒரு நாள் நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பு செய்து நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். வழக்குரைஞர் சங்கத் தலைவர் சசிகுமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், செயலர் குமணவள்ளல், பொருளாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com