திருவாரூரில் உள்ள இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறை சார்பில் சுற்றுச்சூழல் மேலாண்மைக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கண்காட்சியை கல்லூரி முதல்வர் எஸ். ஸ்ரீதேவி தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி துணை முதல்வர் த. மாசிலாமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இக்கண்காட்சியில் நீர், நிலம், காற்று மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பொருள்களை காட்சிப்படுத்தியிருந்தனர்.