மன்னார்குடி அருகே உறவினர் வீட்டுக்குச் சென்ற மகன் காணவில்லை என காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மன்னார்குடியைச் சேர்ந்த தமிழரசன் மகன் வரூஷ் (19). இவர், கோட்டூர் அருகேயுள்ள ஆதிச்சப்புரம் கம்மங்குடி வளைவில் உள்ள தாத்தா அண்ணாதுரை வீட்டுக்குச் செல்வதாக கூறி ஜன. 7-ஆம் தேதி சென்றவர் தாத்தா வீட்டுக்கும் செல்லவில்லை, வீட்டுக்கும் திரும்பவில்லையாம். வரூஷை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என, கோட்டூர் காவல் நிலையத்தில் வருஷின் தந்தை தமிழரசன் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.