முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் புதுப்பிக்கத் தவறியவர்கள், ஜன.24-க்குள் பதிவு செய்ய சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முன்னாள் படைவீரர்கள் மறுவேலைவாய்ப்புக்காக, மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பதிவு செய்தவர்களில் ஜனவரி 2011-ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 2016-ஆம் ஆண்டு வரையிலான காலங்களில் புதுப்பிக்கத் தவறியவர்கள், தத்தமது காலாவதியான வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்துக் கொள்ள அரசால் சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நேரில் அலுவலகத்திற்கு வந்து பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். இச்சலுகை ஜன.24-ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
எனவே, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் இச்சலுகையைப் பயன்படுத்தி, வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.