முன்னாள் படைவீரர்கள் கவனத்துக்கு...

முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் புதுப்பிக்கத் தவறியவர்கள், ஜன.24-க்குள் பதிவு செய்ய சலுகை வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் புதுப்பிக்கத் தவறியவர்கள், ஜன.24-க்குள் பதிவு செய்ய சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முன்னாள் படைவீரர்கள் மறுவேலைவாய்ப்புக்காக, மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பதிவு செய்தவர்களில் ஜனவரி 2011-ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 2016-ஆம் ஆண்டு வரையிலான காலங்களில் புதுப்பிக்கத் தவறியவர்கள், தத்தமது காலாவதியான வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்துக் கொள்ள அரசால் சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நேரில் அலுவலகத்திற்கு வந்து பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். இச்சலுகை ஜன.24-ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 
எனவே, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள்  இச்சலுகையைப் பயன்படுத்தி, வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்து கொள்ளலாம்.  மேலும் விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com